Sunday, October 27, 2013

ஆதலால் காதல் செய்வீர் - பகுதி 1

நண்பர்களே ,  என் உறவினர் ஒருவர் மருத்துவராக சென்னையில் பணி புரிந்த பொழுது ,அவரின் வேலையில் ஏற்பட்ட சில நிகழ்வுகளை பகிர்ந்த போழ்து , சிக்கிய விடயங்களை இரண்டு பதிவுகளாக கொடுக்க எண்ணியிள்ளேன் , இது முதல் பதிவு:


என் உறவினர் அன்று வழக்கம் போல் சென்னை அரசாங்க மருத்துவ மனையில் , தன் மருத்துவப் பயிற்சியை மேற்கொண்டிருந்த போது ,  ஒரு வயதான அம்மா , ஒரு இளம் பெண் , மற்றும் ஒரு நடுத்தர வயதுப் பெண் , என் உறவினரை அணுகினர்.

அந்த வயதான பெண்மணி , 
 "டாக்டர் , (அந்த இளம் பெண்ணை  சுட்டிக் காட்டி ), இது என் மருமகள் ,  நாங்கள் , பேசிகொண்டிருந்த பொழுது , என் மருமகளின் வயிறு தீடிர் என்று வீங்கி விட்டது , பயங்கரமாக வயிறு வலிக்கிறது என்கிறாள் ,அவளுக்கு என்ன பிராப்ளம் என்று பாருங்க "

"பொருங்க நான் செக் பண்றேன் "....

சில நிமிட சோதனைக்குப் பிறகு , " மேடம் , உங்க மருமக கர்ப்பமா இருக்கா "


அந்த மாமியார் சில கணம் அதிர்ச்சியுற்று ,  "டாக்டர் அது எப்படி , என் மகன் , இவ புருஷன் , வெளி நாட்டில் வேலை செய்கிறான் ,  அவன் ஊருக்கு வந்து ஒரு வருசத்துக்கு மேல ஆச்சு , நீங்க கொஞ்சம் நல்லா செக் பண்ணுங்க "....

என் உறவினரும் , மற்ற டாக்டர்களும் இது ஒரு விவகாரமான கேஸ் என்பதை புரிந்து கொண்டனர்.
அவர்களுக்குள் டிஸ்கஸ் செய்துவிட்டு , 
"அம்மா , இங்க பாருங்க , நீங்களும் , உங்க  மருமகளும் உள்ள வாங்க ..."
என்று அவர்களை உள்ளே அழைத்து , மருமகள் பிரசவ வலியில்  இருப்பதை சுட்டிக் காட்டி, அந்த மாமியார் மற்றும் அவர் உறவினப் பெண் முன்னிலையே , அந்த இளம் பெண்ணுக்கு பிரசவம் பார்க்கப்பட்டது ...

வெற்றிகரமாக குழந்தை வெளியே எடுக்கப்பட்டு , அந்த இளம் பெண் ரெஸ்ட் எடுக்க வார்டில் அனுமதிக்கப்பட்டாள் .  அந்த மாமியாரிடமும் , உடன் வந்த உறவினப் பெண்ணிடமும் , அந்த குழந்தை  மருமகளுக்குதான் பிறந்தது என்று எழுதி வாங்கப்பட்டது .

பின் அந்த மாமியாரிடம் விசாரித்த போது :

"என் மகன் , வெளி நாட்டில் வேலை செய்கிறான்.  அவன் தான் மூத்த மகன் "
"என் வீட்டில் அவனைத் தவிர , எனக்கு இரண்டு மகன்கள் ".
"என் இரண்டாவது மகன் , கல்யாணம் ஆனவன் ,அவன் உண்டு அவன் வேலை  உண்டு என்று இருப்பான் "
"என் மூன்றாவது மகன் , பிளஸ் டூ படிக்கிறான் ...என் மருமகள் அவனுக்கு பாடம் சொல்லிக் கொடுப்பாள் ..அவர்கள் இருவரும் நன்றாக பேசிக் கொள்வார்கள்"

என்று குடும்ப சூழ் நிலையை விளக்கினார்.


அந்த பெண்ணிடம் விசாரிக்க , "இந்த விபத்தின் சூத்திரதாரி அந்த பிளஸ் டூ படிக்கும் மாணவன் என்று புலப்பட்டது ".

விஷயம் கேள்விப்பட்டவுடன் , அந்த வெளி நாட்டு கணவன் , உடன் சென்னை வந்திறங்கினான்.

அந்த குழந்தை , வலுக் கட்டாயமாக , தாயிடம் இருந்து பிரிக்கப்பட்டு , மாமியாரிடம் கொடுக்கப் பட்டது .

கணவன் , அந்த மனைவிக்கு மட்டும் டிக்கட் எடுத்து உடன் அழைத்து  சென்றான் மருத்துவ மனையில் இருந்து நேராக .


ஆகவே, நண்பர்களே , "ஆதலால் காதல் செய்வீர்!"...

தொடரும் ....