Friday, September 16, 2011

சூர்யா படத்தில் விஜய் வில்லன் ?

கூ..கூ  வென்று ஒரு ரயில் அதி வேகமாக போய் கொண்டிருக்கிறது.தீடிரென்று அதன் கூரையில் ஒரு லாங் ஜம்ப் அடித்து ,லேன்ட் செய்றாரு , நல்லா பரந்த வெற்று மார்போட , ஆறு புள்ளி அஞ்சு பேக்கோட, ஹீரோ சூர்யா.

"அரிசியும் , உளுந்தும் தனியா ஊரபோட்டு , ஓடுற கிரைண்டர்ல , தனி தனி யா  அரைச்சு , அந்த உப்பு ,இந்த உப்புன்னு போடாம , நல்ல கல்லு உப்பை ,வீட்ல BP இருக்குறவங்கள மனசுல வச்சு , அதிகமா இல்லாம ,கொரட்சலாவும் இல்லாம ,பக்குவமா போட்டு, கைபடாம கலக்கி , என் அப்பன் பத்து வருஷமா போட்ட வெள்ளை பனியனை , உஜாலாவுல வெளுத்து வெள்ளையாக்கி, அது மேல அரச்ச  மாவை ஊத்தி , ஆவில சுட்டு வரது தாண்டா  இட்லி "  என்று நம்ம டைரக்டர் ஹரி ஸ்டைல் ல ,நிறுத்தாம பஞ்ச் அடிச்சிட்டு , "அந்த இட்லி ல, என் டாவு, அரை லிட்டர் இதயம் நல்லெண்ணெய் ஊத்தி சாபிடுறதை எவன்டா கிண்டல் பண்ணினது , வாடா இப்ப வெளியேன்னு " சிங்கமா கர்ஜனை செய்றாரு. 

அப்ப சொய்க் சொய்க் நு ஒரு பேக்கிரவுண்டோட என்ட்ரி கொடுகிராறு விஜய்.
அவர் மூஞ்சியெல்லாம் ஒரே சந்தனம், நடுவில பெரிய பொட்டு,கைல ஒரு பெரிய வீச்சு அருவா வேற.  அவரும் சட்டை போடல ,அவருக்கும் அதே ஆறு புள்ளி அஞ்சு பேக் வயுதில்ல.

"இட்லி சாபிட்ரதுங்க்றது ஒரு பீலிங் , அதுல இதயம் நல்லெண்ணெய் ஊத்தினா    டேசு டா , இல்ல கோல்ட் வின்னர் ஊத்தினா டேச்டான்னு பரீட்சை செய்றதுல எனக்கு எப்பவும் உடன்பாடில்ல .  அதுவுமுல்லாம நான் ஒரு வாட்டி இட்லி சாப்டுட்டஆ , என் வீடு நாய் கூட மோந்து பாக்காது அந்த இட்லிய "  அப்படின்னு பல டைரக்டர் ஸ்டைல் ல போடுறாரு ஒரு மொக்கைய .

அப்புறம் ரெண்டு பெரும் பீட்டர் ஹுசைன் சொல்லி கொடுத்தமாதிரி , தீயா அடிட்சிகிறாங்க.

த்டீருனு ஒரு கை ,அதுல ஒரு எப் ம்  பாட்டு ஓடுற ரேடியோ இருக்கு ...


ஒரு நிமிஷம் இந்த கதைய விட்டு கொஞ்சம் வெளியில வாங்க , ஒரு சைடு ட்ராக்கு :

சமீபத்தில  ஒரு பாட்டு கேட்டேன் ,நம்ம நா.முத்துக்குமார் எழுதின "எங்கேயும் எப்போதும்" பாட்டு,இதுல என்ன பேர் அதுன்னு கொஞ்சம் கூட என் டூப் லைட்டு மூளைக்கு எட்டமாடீங்கது ,நீங்க கொஞ்சம் கமெண்ட் சொல்லுங்க ,அந்த பாட்டு வரிகள்: 

உன் பேரே தெரியாது 
உனைக் கூப்பிட முடியாது 
நான் உனக்கோர் பேர் வைத்தேன் 
உனக்கே தெரியாது 
அந்தப் பேரை அறியாது 
அட  யாரும் இங்கேது 
அதை ஒரு முறை சொன்னாலே 
தூக்கம் வாராது 

அட தினம் தோறும் அதைச் சொல்லி 
உன்னைக் கொஞ்சுவேன் 
நான் அடங்காத அன்பாலே 
உன்னை மிஞ்சுவேன்

You never find a better time
Make a stand you ll be fine

ஹோ ..சூடான பேரும் அது தான் 
சொன்னவுடன் உதடுகள் கொதிக்கும் 
சூரியனாய் நீயும் நினைத்தால் 
அது இல்லையே ..
ஹோ ..ஜில்லென்ற பேரும் அது தான் 
கேட்டவுடன் நெஞ்சம் குளிரும் 
நதி என்று நீயும் நினைத்தால் 
அது இல்லையே...

சிலிர்க்க வைக்கும் தெய்வம் இல்லை 
மிரள வைக்கும் மிருகம் இல்லை 
ஒளி வட்டம் தெரிந்தாலும் 
அது பட்டப் பெயர் இல்லை
என் பேரின் பின்னால் வரும் பேர் 
நான் சொல்லவா ...?

You never find a better time
Make a stand you ll be fine.

பெரிதான பேரும் அது தான் 
சொல்ல சொல்ல மூச்சே வாங்கும் 
எத்தனை எழுத்துக்கள் என்றால் 
விடை இல்லையே..
ஓ ..சிறிதான பேரும் அது தான் 
சட்டென்று முடிந்தே போகும் 
எப்படிச் சொல்வேன் நானும் 
மொழி இல்லையே ...

சொல்லி விட்டால் உதடு ஒட்டும்
எழுதி  விட்டால் தேனும் சொட்டும் 
அது சுத்தத் தமிழ் பெயர் தான் 
அயல் வார்த்தை அதில்  இல்லை 
என் பேரின் பின்னால் வரும் பேர் 
நான் சொல்லவா ...?

உன் பேரே தெரியாது .......

நன்றி:
 
http://tamil-paadal-varigal.blogspot.com




சரி மறுபடியும் கதைக்கு வருவோம். என் பிரண்டு ரெண்டு பேரு இருக்காய்ங்க ...
ஒருத்தன் சூரிய மூர்த்தி , ஒருத்தன் விஜய் ராஜன் .  ரெண்டு பேறும் சினிமாவுல நடிக்கினுமுன்னு , ஒரு உப்புமா கம்பனி டிறேக்டர்ட மேல சொன்ன கதைய கேட்டுட்டு ,
என்னை பணம் புரட்டு , நாங்க நடிகபோரம் நு  ஒரே கொலையா கொல்ராஇஙக .

போங்கடா ,காசுக்கு பிடிச்ச கேடான்னுடு ,அவங்க வீட்டுக்கு சொல்லனுமுன்னு போறேன்:  இதுக உருப்படுமானு ,அவங்க அம்மாக்கள், வெளக்க மாத்த ஆட்டி ஆட்டி பேசுனது நைட்டு கனவுல குளோசப்புல வந்து , உசுர வாங்குதுது போங்க !



டிஸ்கி : அது என்ன , ஆறு புள்ளி அஞ்சுன்னு கேட்குறீங்களா ..வேற ஒண்ணுமில்ல , எட்சாவ  ரெண்டு கோட போட்டுகிட்டு திரியுதுங்க இந்த ரெண்டு பக்கிங்களும்  ,  அந்த ரெண்டு முன்னணி நடிகர்களுக்கும் போட்டியா இருக்கனுமாம் ,அப்ப தான் உடனே வாய்ப்பு கெடைக்குன்னு பாடம் நடத்துற கொடுமைய எங்க போயி சொல்ல ?

4 comments:

  1. @என் ராஜபாட்டை"- ராஜா
    வாங்க , நீங்க தான் மொதல்ல ,சந்தோசம் சார் !

    ReplyDelete
  2. இந்த கதைய படமாக்கினால் நிச்சயம் 100 நாள் ஓடும்.
    இப்படிக்கு
    வெட்டி ஆபிசர்.
    தலைவர்
    அகில உலக அல்வா நாயகி ரசிகர் மன்றம்.

    ReplyDelete
  3. naan edho solla vareenganu paathen ponga sir

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)