Saturday, December 7, 2013

என்னா பாட்டுடா !

எங்கள் ஊரில் ஒரு டைளர் …காலப் போக்கில் அவர் ஒரு ரியல் எஸ்டேட் ஏஜண்டாக மாறி கோடியில் புரள ஆரம்பித்தார்.  ஊரில் அவரும் ஒரு நம்பர் ஒன் ஏஜன்ட்.

என் கிரகம் . அவர் மூலமாக ஒரு வணிக கட்டிடம் விலைக்கு வந்ததால் வாங்கத் துணிந்தேன் . உடனே பல கோடி என்று எண்ணவேண்டாம் !  அது ஒரு மூன்று மாடி கட்டிடம் . அதில் ஒரு தளம் மட்டுமே என்னால் வாங்க முடிந்தது. விலை பேசி , அட்வான்ஸாக சில பல லட்சங்களை வாரி இறைத்தேன். 

இன்னும் சில நாளில் பத்திரப் பதிவு என்று காத்திருந்தேன்.  அதற்குள் பல வித குழப்பங்கள். விளைவித்தது உற்றாரும் , உறவினர்களும்.  அவர்கள் சொன்னது , "சரியான கேணப் பயடா நீ..  இந்த மாதிரி ஒரு ப்ளோர் வாங்கிற கலாச்சாரம் , பெரிய சிட்டிக்கு வேணா ஒத்து வரும் , இங்கெல்லாம் சரிபடாது , அது , இது , என்று ஒரே அட்வைஸ் மழை"….

என்னடா இது , அவங்க சொன்ன மாதிரி , அவசரப்பட்டுடோமோ என்று ஒரே குழப்பம் , சில நாட்கள் கழிந்தது ….மறு நாள் பத்திரப் பதிவு ….இரவெல்லாம் உறக்கமில்லை …

எப்படி இந்த பத்திரப் பதிவை தட்டிவிட்டு , கொடுத்த அட்வான்சை திருப்பி  வாங்குவது. மறு நாள் விடிந்தது . பேசாமல் துணிந்து வாங்கலாம் என்றும் ஒரு நப்பாசை.

காலையில் இரு மனதுடன் காத்திருந்தேன் ….திக் திக் நிமிடங்கள்…

அப்போது அந்த பெரிய மனிதரின் வலது கை , என் வீட்டில் விஜயம் செய்தார்.  என்னடா , காலை ஏழுமணிக்கு வந்திருக்கிறாரே , பத்திரப் பதிவு ,  பத்து  மணிக்கு மேல் தானே என்று எனக்கு ஒரே யோசனை.

அவர் சொன்னது , எனக்கு வயிற்றில் பாலை வார்த்தது.  அதாவது நான் சொன்ன ரியல் எஸ்டேட் புள்ளியின் , தாயார் இறந்து விட்டதாகவும் ,  பத்திரப் பதிவு நடக்க இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு மேல் ஆகும் என்றார்.


"ஆகா , அடிச்சது லக்கி பிரைசு "  என்று அவரின் தாயார் காரியத்திற்குப் போய் வந்து விட்டு , இரண்டு மூன்று நாட்களுக்கு  பிறகு , 'வாழ்க்கையில்  முதன் முதலில் வணிகத் துறையில் காலடி  வைக்கலாம் ' என்று நினைத்து  செய்த  காரியத்திற்கு இப்படி ஒரு தடங்கல் வந்தது மனதிற்கு என்னவோ போல உள்ளது , எனவே இந்த டீல் கான்செல் ' என்று பக்குவமாக எனது தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தேன் .

ஆனால் அவரோ , "அப்படியா , நீ கொடுத்த அட்வான்சு செலவாயிரிச்சு , கொஞ்ச நாள் பொறு , திருப்பி கொடுக்கிறேன் என்று வயிற்றில் அமிலத்தை வார்த்தார் அந்த பெரிய மனிதர்".

நான் கேள்விப் பட்ட வரையில் , நீங்கள் அட்வான்சு கொடுத்து விட்டு , பின் டீலை கான்சல் செய்தால் , கொடுத்த அட்வான்சு , 'அரோகரா தான்'.  இந்த விஷயம் எனக்கு முதலில் தெரியாது.

இதெல்லாம் மற்றவர்கள் பயமுறுத்தியது. ஒருவன் நஷ்டப் படும் பொழுது , இந்த உறவினர்கெல்லாம் , என்ன ஒரு மகிழ்ச்சி போங்க …


மீண்டும் உறக்கம் இல்லாமல் , சில பல நாட்கள் ….பின்பு அப்படி இப்படி என்று பல பஞ்சாயத்திற்கு பிறகு  , அந்த பெரிய மனிதர் வைத்திருந்த நிலத்தை , அந்த வணிக வளாகத்திற்கு பதிலாக , கிரையம் செய்து கொடுத்தார்.

சமீபத்தில் கீழே உள்ள தலைவர் பாட்டை பார்த்தவுடன் இந்த பதிவை எழுதி விட்டேன்…