Thursday, September 15, 2011

டி ராஜேந்திரா கொக்கா

இன்னைக்கு ரேடியோவுல , தனக்கு நேர்ந்த சங்கடத்தை ஒரு நேயர்  பகிர்ந்து கொண்டது , ஏனோ எனக்கு டி ராஜேந்தரை உடன் ஞாபகப் படுத்தியது .  அந்த நேயர் கடைசியில் சொன்ன ஒரு பஞ்ச் காரணமா தெரியல ,அவர் சொன்ன சங்கடம் :

   நானும் , எங்க ஏரியா  பொண்ணுக்கும், ஒரு நல்ல நட்பு உருவாகியது.
   பின்பு நான் அவரை காதலிக்க ஆரம்பித்தேன் . ஒரு நாள் என்னை கல்யாணம் 
    பண்ணிகிரயான்னு கேட்டப்ப , இல்ல எங்க வீட்டுல என்ன மாமனை தான் 
    கல்யாணம் செய்யணும்னு சொல்லிட்டாங்க நு சொன்னா அவ.

     நானும் சரி,நம்ம எப்பயும் போல நல்ல பிரண்ட்சா இருப்போம்னுன்னு சொல்லி ,எங்க நட்ப வளர்துகிட்டோம் .  

     அப்புறம் எனக்கு பாரின்ல வேலை கெடைச்சு  போயிட்டேன் . ஆனாலும் அவ கூட நட்பை விடாம , அடிக்கடி போன் செய்து பேசிக்கிட்டு தான் இருந்தேன் .

    ஆனா சமீபத்தில தான் கேள்வி பட்டேன், அவ மாமா வுக்கும் ,  இவ குடும்பத்துக்கும் பெரிய சண்டை வளர்ந்து , கல்யாணப் பேச்சை நிருதிடாங்கனு ..  ஆனா அவள் ரெண்டு நாளைக்கு முன்னாலே ,அவ மாமனை கல்யாணம் செய்தது என்  நண்பர் மூலமாக தெரிய வந்துச்சு .

   நான் அவ்வ்ளோவ் பெருந்தன்மையா பழகியும் ,அவ என் கிட்ட கல்யாணம் செய்ய போறதை சொல்லவே இல்லை.

   அவளுக்கு போன் பண்ணி ,ஏன் ,எங்கிட்ட கூட சொல்லாம ,இப்படி நடந்து கிட்ட அப்படின்னு கோபமா கேட்டப்ப , உன்னால எனக்கு எதாவது பிரச்னை வரும்னு தான்  சொல்லலை சொன்னா பாருங்க, எனக்கு அப்ப இருந்து மனசே கேட்கலை .


   மேல சொன்னது எல்லாம் சொல்லிட்டு ,ஒரு பஞ்ச் விட்டாரு ,அது:

    "காதிலிக்கிற எல்லாதுக்கும் ஒன்னு சொல்ல விரும்புறேன் ,  பூக்களை பறிக்கும் பொது , முள்ளால மட்டும் தான் காயம் வரும்னு நெனைக்காதீங்க ,
 சில சமயம் பூவே உங்களை குத்திடும் "




6 comments:

  1. வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி மதுரை சரவணன்.

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்.

    ReplyDelete
  3. "பியார் கா பஞ்சாமா" அப்படீன்னு ஒரு படம் பாருங்க...
    நம்ப VV "ஜெஸ்சி" மாதிரி பொண்ணுங்களை பத்தினது

    பொண்ணுங்களையே வெறுத்துடுவீங்க

    ReplyDelete
  4. @ராஜா,

    அப்படியா பாக்கணுமே ..வருகைக்கு நன்றி நண்பரே!

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)