Friday, May 31, 2013

நீங்க நல்லவரா , கெட்டவரா?

என்ன நண்பர்களே , தலைப்பு நாயகன் படத்த நினைவு படுத்துகிறதா ?
சரி , இந்த பதிவு அப்படி  கொஞ்சம் கோக்கு மாக்கா இருக்கும் , அப்பீட்டு  ஆகணும்னா இப்பவே ஆகிக்கோங்க.

விஷயம் என்னன்னா , நீங்க நல்லவரா கெட்டவரான்னு அடுத்தவுங்க உங்கள தீர்மானிக்கிறது எந்த ஒரு விசயத்தையும் நீங்க எப்படி பாகீறீங்க அப்படின்றத வச்சுதான் .  அவங்க தீர்மானம் பல சமயம் தப்பா தான் இருக்கும் , ஆனா என்ன பண்றது , நாம ஒருத்தர ஒருத்தர் அண்டி இருக்கனும் அப்படின்னு வர்றப்ப , நாம தப்பு பண்ணவில்லைன்னா  கூட சில சமயம் அவிங்க சொன்னா நாம குற்றவாளி கூண்டுல ஏறித்தான் ஆகணும் இல்லைங்களா ...

பாருங்க , நான் வேல செய்ற இடத்துக்கு போற வழியில இப்படி தான் ஒரு கடை வாசலில் ஒரு விளம்பரப் பலகையைப் பார்த்தேன். அத நான் ஒரு அர்த்தம் எடுக்கப் போயி ,என் கூட வேலை பாக்குறவன் என்ன அசிங்கமாப்    பாக்குற மாதிரி ஆகிப் போச்சு பாருங்க.

மொதல்ல ஒரு உதாரணம் .சொல்றேன்  இப்ப கீழ இருக்குற படத்தப் பாருங்க

மேல உள்ள படத்துல மொதல்ல ,எது உங்க கண்ண உறுத்துது ...  அதுல இருக்குற அந்த சின்ன கருப்பு புள்ளியா இல்ல மிச்ச இருக்குற வெள்ளை பகுதியா ?

நீங்க புள்ளிய கண்ணு வச்சா , நீங்க எல்லா விசயத்துல இருக்குற பெரும்பான்மையான பாசிடிவ பாக்காம நெகடிவ மட்டும்தான் பாக்குற ஆளாம் ....பாருங்க ஒரு புள்ளிய வச்சு  பய புள்ளைக நம்மளப் பத்தி சோசியம் சொல்ல ஆரம்பிக்ராயீங்க வெளங்குமா.

சரி விசயத்துக்கு வருவோம்.  நான் வேலைக்கு போற வழியில இருந்த விளம்பரம் இது தான் . அது ஒரு வாட்ச் வெளம்பரம். அந்த விளம்பரத்துல , ஒரு வெள்ளைக் கார பொண்ணு சும்மா டக்கரா , செக்சியா போஸ் கொடுக்குது , கையில ஏகப் பட்ட வாச்சுங்க ...ஆனா பாருங்க அந்த விளம்பரப் பலகியில  கொட்டை எழுத்துல ஒரு வாக்கியம் , அது இது தான் ;



இப்ப இத நீங்க படிக்றீங்க , உங்க மனசுல என்ன ஓடுது ....ஒரு ஆங்கில கெட்ட வார்த்த தானே ...நானும் அப்படிதான் நெனச்சு சொன்னேன் ...அதுக்கு தாங்க எனக்கு ஒரு கெட்ட பேரு ....அவன்  நீ ஏன் அந்த மறைக்கப் பட்ட எழுத்த இப்படி நெனைக்க கூடாது ,

FIND ME I'M FAMOUS

அடங்கொன்னியா  எப்படிலா யோசிக்ரானுங்கப்பு ...
.
இன்னொரு சேதி ...ஒரு பொடியன் வந்தான் , சரி அவனுக்கு நாலு வார்த்த நல்லது சொல்லி நல்லவனாகலாமின்னு , ' டேய்  தம்பி , உனக்கு எது வேணும்னாலும்  பிரபஞ்சதுக்கிட்ட கேளுடா , உனக்கு கெடைக்கும் , பெரியவங்கல்லாம்  சொல்றாங்க ' அப்படின்னு சொன்னேன் ...அந்த பய புள்ள , அத அர கொறையா கேட்டுபிட்டு , ஒரே ஓட்டமா ஓடுனான் .

ஒரு அரைமணி நேரம் கழிச்சி திரும்பி வந்தான் ....வந்தவொன்னே , போன்னே நீ ஒரு பெரிய கெட்டவன் அப்படி இப்படின்னு வைய ஆரம்பிச்சுட்டான் . பையன ஆறுதல் படுத்தி என்னன்னு கேட்டா , பய புள்ள , பிரபஞ்சம் அப்படின்னு சொன்னத  சரியா புரியாம , பக்கத்து தெரு பிரபா அப்படிங்கிற பொண்ணுகிட்ட போயி , உன்கிட்ட கேட்டா என்ன வேணாம் கெடைக்குமாம் , ஐ லவ் யூ  அப்படின்னு சொல்லி செருப்படி வாங்கிட்டு வந்திருக்கான் ....என்னத்த சொல்ல போங்க ...சரி நீங்க நல்லவரா இல்ல கெட்டவரா ...தயவு செய்து தெரியலயேப்பா  அப்படின்னு மட்டும் கம்மென்ட் போடாதீங்கண்ணே .

நன்றி வணக்கம்.

2 comments:

  1. inru oru thagaval thenkachi swaminathan mathiri katailam solli karuthu solla arambichiteenga..nallathan iruku

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)