Saturday, July 20, 2013

ஒரு ஜோக்கும், ஒரு பாடலும்...

வழக்கம் போல் வானொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது காதில் விழுந்தவைகள் இவை :-

மேட்டர் 1:

இது ஒரு ஜோக் , முக்கியமாக மனைவியிடம் அகப்பட்டு முழிக்கும் கணவர்கள் இது மாதிரி ஜோக்குகளுக்கு விழுந்து விழுந்து சிரிப்பார்கள். நான் விழுந்து விழுந்து சிரிச்சதுல ஒரே வலி தான் போங்க. ஏற்கனவே கேட்டுருந்தாலோ , அட இது என்ன பெரிய ஜோக் என்று தோணினால் , உங்க லெவல் வேற பாஸ்.

ஒரு கணவன் மனைவிக்கு , திருமண அனிவேர்சரி நெருங்கியது. மனைவியிடம் அவளுக்கு என்ன வேண்டும் என்று கேட்க்கும் 'மொறை' செய்யாவிட்டால்  'மொத்து' விழுமே என்று, கடமையாக அவளிடம்   கணவன் சென்று ,
   அன்பே நம் கல்யாண நாளுக்கு உனக்கு ஒரு பரிசு கொடுக்க விரும்புகிறேன் என்று ஒரு பிட்டை போட்டான்.
  மனைவி, ஆஹா , நாம இந்த வருசம் கேட்டு வாங்குறதுக்கு முன்னால  ஆடு தானாவே தலையை வெட்டக் கொடுக்குதே என்று சந்தோசத்துடன் , 'ஏங்க , என்னை நான் இதுவரைக்கும் போகாத இடத்துக்கு கூட்டிட்டு போங்க ' என்றால் .

உடனே கணவன் அவள் கையை  பிடித்து இழுத்து  தர தர என்று இழுத்துப் போய்  ஒரு அறையில் கொண்டு விட்டான். அந்த அறை ,  சமையல் அறை .  

மேட்டர் 2

அதே வானொலியில் பல நாட்களுக்குப் பிறகு இந்த பாட்டை  போட்டார்கள். இந்த பாடல் முதலில் கேட்க்கும் போது ஒரு மாதிரியாக இருந்தாலும் , கேட்க கேட்க பிடிக்க ஆரம்பித்துவிட்டது. 
இந்த பாடல் கங்கை அமரனின் வாரிசுகள் , மங்காத்தா புகழ் வெங்கட் பிரபு மற்றும் 'என்ன கொடும சரவணா' புகழ் பிரேம்ஜி  அமரனின் கைவண்ணம் என்பது பின்பு தான் தெரிந்தது.

சரி யு டீபில்  கிடைக்குதா என்று பார்த்த போது , காட்சியுடன் வந்த பாடலைக் கேட்டபோது , ஒரே காமடியாக இருந்தது. பார்த்து ரசியுங்கள் :-




நன்றி மீண்டும் சந்திப்போம்.







1 comment:

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)