Thursday, January 30, 2014

நான் வெட்கத்துக்கு பக்கத்துல போகாதவ!

இந்தக் காலத்தில் பல பேர் சொல்லும் விஷயம்:

வயசாகிட்டே போகுது , நல்ல பெண் / ஆண்  கிடைக்கமாட்டேன்குது என்ற புலம்பல்.

அவ்வளவு கஷ்டமா என்று ஆராய்ந்தால் , தப்பு அவர்களின் எதிர்பார்ப்பில் தான் உள்ளது. எல்லோருக்கும்   பெண் அல்லது மாப்பிள்ளை இப்படி இருக்க வேண்டும் , அப்படி இருக்க வேண்டும் என்று நிபந்தனைகள்.

"இது தான் மாப்பிள்ளை / பொண்ணு  , கட்டு தாலியை !"  என்ற காலம் போயி , இப்போது மாட்ரிமோனியலிலும் , நண்பர் வட்டாரத்திலும் , வேலை செய்யும் இடங்களிலும் கூட தேடும் நிலைக்கு ஆளாகி உள்ளார்கள்.

சமீபத்தில் நான் ஒட்டுக் கேட்ட ஒரு விஷயம்:

நேரம் இரவு பத்து.  பெங்களூரின் குளிர் உடலை தழுவி குறு குறுப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. நான் சென்னைக்குப் போகலாம் என்று ஒரு ஆம்னி பஸ்சுக்கு காத்திருந்தேன். அருகில் அமர்ந்திருந்தது ஒரு இளம் பெண். காதில் , இளம் பெண்களின் உற்ற தோழனான அலை பேசி.

அந்த நேரத்தில் யாரோ ஒரு பையனுடன் கடலை போட்டுக் கொண்டிருந்தாள் என்று அவள் பேசியதில் இருந்து புரிந்தது.  நார்மலாக போய்க் கொண்டிருந்த உரையாடலில் , அவள் இப்படி ஒரு திடீர் கேள்வி கேட்டாள் போனில் பேசிய பையனிடம்:

"உனக்கு தான் பத்து , பன்னிரண்டு நண்பர்கள் இருக்கங்கல்ல , அதுல ஒரு நல்ல பையனுக்கு எனக்கு ஒரு இன்ட்ரோ கொடேன்!"

அதற்கு அவன் என்ன சொன்னான் என்பதை இவளின் பதிலில் இருந்தே கிரகிக்க முடிந்தது. அவன் அநேகமாக கூறியது:

"நானே ஒரு நல்ல பையன் தானே".

இவளின் பதில்:
"நீ நல்லவன் தான் ஆனா உங் கூட பழகினா பிரியா திட்டுவாளே".

ஆக, நண்பியின் லவ்வர் போனில்  இவளுடன் இரவில் கடலை,  நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஹானர்.

அவனின் கேள்வி: "நீ நல்லவன் அப்ப்டின்ன என்ன எப்படி இருக்கனுமின்னு எதிர்பார்குற?"

இவள் பதில் :  "நான் அப்படி அப்படி இருக்கனுமின்னு எதிர்பாக்கல.  பொதுவா நல்ல பையனா இருக்கணும் "


நான் போக வேண்டிய பஸ் வந்து விட்டதால் , அந்த சுவராசிய உரையாடலை முழுதும் கேக்க முடியல.

சரி தலைப்புக்கு லிங்க் கொடுக்கிற டைம் ஆச்சி:






3 comments:

  1. இப்படியெல்லாம் இருக்கா
    நான் அந்த காலத்து ஆளா
    புரிந்து கொள்ள கொஞ்சம் கஷ்டமா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தலைவா, கொஞ்சம் லேட்டா பொரந்திருக்கலமின்னு தோணுது!

      Delete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)