Thursday, September 15, 2011

ரஜினி , கமல் இணையும் புதிய படம்

என் இனிய தமிழ் வலை மக்களே, உங்கள் பாசத்திற்கும் ,நேசத்திற்கும் உரிய இந்த இளையதாசன் , டிரங்கு பெட்டியில் தூங்கிகொண்டிருந்த என்
ஓட்டை காமிராவை தூசி தட்டி , உங்களுக்காக கடல் கரையில் வாசம் பிடித்து ,அதை நேசத்துடன் உங்கள் பார்வைக்கு இரு திரை இமயங்களை வைத்து அப்படியே லவட்டி கொண்டு வந்திருக்கிறேன். அதன் விவரம் இந்த பதிவின் கடைசியில்.

நெதர்லாந்த் ஜோக்:

ஒரு நகர மனிதன் , கிராமத்திற்கு வாத்து வேட்டைக்கு போனான். ஒரு வாத்தை குறி பார்த்து சுட , அது ஒரு வயலில் விழுந்தது. அந்த வயலின் உரிமையாளரான ஒரு விவசாயி ,அந்த வாத்து இனி தனக்கு தான் சொந்தம் என்றான். நகர மனிதன் அவனுடன் வெகு நேரம் விவாதம் செய்து பார்த்தான் .  ஆனால் விவசாயி மறுத்து , ஒரு யோசனை கூறினான்.  நாம் இருவரும் யு கிக் , ஐ கிக் விளையாடுவோம் ,யார் ஜெய்க்கிரர்களோ , அவருக்கு தான் இந்த வாத்து என்றான். அது என்ன விளையாட்டு என்றான் நகர வாசி. "நான் ஓங்கி உன் மர்ம ஸ்தானத்தில் உதைப்பேன் , நீ அதனை தாங்கி கொண்டால் , நீ வெற்றியாளன் ...நான் உன் உதையை தாங்கி கொண்டால் நான் வெற்றியாளன் " என்றான் விவசாயி.   ஓகே ,நான் ரெடி ,நீ பர்ஸ்டு என்னை உதை என்று தம் கட்டி நின்றான் நகர வாசி.
விவசாயி ஓங்கி தன காலால் அவன் மர்ம ஸ்தானத்தை தாக்கியதில் ,அப்படியே மயக்கமுற்றான் நகர வாசி .  ஒரு அரை மணி சென்று எழுந்த நகர வாசி ,  சரி, இப்ப நான் உன்னை உதைகட்டுமா என்றான் .  ஆனால் அந்த விவசாயி , சரி சரி, நீ தான் வெற்றியாளன் ,இந்த பிடி உன் வாத்தை என்று அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.


அமெரிக்க ஜோக்:

ஒருவன் காரை அதி வேகமாக ஓட்டி சென்று கொண்டிருந்தான். அப்போது அவன் பின்னால் ஒரு போக்குவரத்து போலிஷ் , லைட் போட்டு அவனை ஓரம் கட்டினார். அந்த போலிஷ், "நீ ஒரு நல்ல ரீசன் சொன்ன , உனக்கு ஸ்பீட் பைன் போடாம விட்ருவேன் ,சொல்லு ஏன் இந்த எம வேகத்தில ஓட்டின?" 

 அவன், "சார் ,நாலு வாரத்துக்கு முன்னாடி என் பொண்டாட்டி உங்கள மாதிரி ஒரு போலிசோட ஓடி போயிட்டாள் ...என் கார் பின்னாடி போலிஷ் வண்டிய பாத்ததும் , எங்க என் வைப்ப , திருப்பி கொடுக்கத்தான் என்னை விரடிடுட்டு வரீங்கன்னு நெனச்சேன் சார்!"


நுசிலாந்து சோக்கு:

ஒரு பர்கர் கடையில் நுழைந்த ஒரு வயதான தம்பதி ,  ஒரே ஒரு பர்கர் வாங்கி கொண்டு , அதை சரி பாதியாக பிரிக்க தொடங்கினர்.  அதனை பார்த்த ஒரு கஸ்டமர் , நான் வேண்ண, இன்னொரு பர்கர் வாங்கி தரட்டுமா அந்த அம்மாவுக்கு என்றார்.  அதற்கு ,அந்த கணவர் ,இல்லை நாங்க எப்பய்மே எதைய்மே ஷேர் பண்ணிகுவோமுன்னாரு.
கணவர் அவர் பங்கு பர்கரை மெதுவாக சாப்பிட தொடங்கினார். அந்த அம்மாள் சாபிடாமல் இருப்பதை பார்த்த அந்த கஸ்டமர், "பாருங்க அவங்க சாபிடல்ல ,நான் இன்னொன்று வாங்கி தரேன் என்று மறுபடியம் ஆரம்பிக்க ",  இல்ல வேண்டாம், நாங்க எப்பய்மே எதைய்மே ஷேர் பண்ணிக்குவோம் என்று மீண்டும் மறுத்தார் கணவர்.
என்னங்க நீங்க , நான் வாங்கி தருவேன் என்று அடம் பிடித்தார் அந்த கஸ்டமர்,அவரை பாத்து கத்தினாள் அந்த வயதான மனைவி , "யோவ் , நான்  அந்த பல் செட்டுக்கு வெயிட் பண்றேன் , உன் வேலைய பாத்துக்குட்டு போ தம்பி என்றாள்.


டிஸ்கி :  என்னடா ,தலைப்புக்கு வரலயேன்னு உங்க BP கூடிசுன்னா, மேல உள்ள ஜோக் மற்றும் என் முந்தைய பதிவு ஜோக்ஸ் படிச்சு , ரிலாக்ஸ் பண்ணுங்க ப்ளீஸ்.

2 comments:

  1. nallaa irukkungka..vaalththukkal...! naanum atuththa pal settukkaaka watinig ,vaalththukkal

    ReplyDelete
  2. வருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி மதுரை சரவணன்.

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)