Friday, September 30, 2011

வாகை சூட வராதே!

நம்ம பிரபல பதிவர் கவுன்செல் பார் எனிதிங் அய்யா அவுங்க , கமெண்ட் போடுறப்ப ஏற்படற பிரசினைங்கள ,கேள்வியா கேட்டு , ஒரு பதிவு போட்டிருந்தாரு. எனக்கும் அந்த பிரச்சினைங்க இருந்துச்சு ,இப்ப அவர் பாணில , எனக்கு பதிவுலகத்தை உலா வர்றப்ப தோன்ன கேள்விகளை ஒரு பதிவா போட்டுட்டேன்.

நண்பர்களே ,அன்பர்களே ,பதிவுலக சீமான்களே ,கோமான்களே ,இது யார் மனதையும் புண்படுத்தும் பதிவு அல்ல. சும்மா என் மனதில் தோன்றிய லாஜிக் இல்லா கேள்விகள். புடிகலென்ன ,ஜஸ்ட் இக்நோர் இட். ஏன்னா ,நீங்க சொல்ற மாதிரி ,எனக்கு தோன்னத கிறுக்கி இருக்கேன். சூடான ,என் முந்தைய பதிவை படித்து ,மனதை இலகுவாகி கொள்ளுங்கள்.

சரி கேளிவிகளை நான் தொடுக்கட்டுமா?

நம்ம பதிவுலக நண்பன் , பதிவுலக எம் ஜி ஆர் (அண்ணே இந்த பட்டம் உங்களுக்கு இது வரைக்கும் யாரும் குடுகலையின்ன, இந்த பதிவுலக ஏழை ,அத கொடுக்கிறதுல ரொம்ப பெருமை படுறேன்) அவர்கள் வழக்கமாக சினிமா போயிட்டு வந்து , அதுல வர்ற , முத்தான வசனங்கள , ரசிக்கும் படியா எழுதி இருப்பாரு. என்னோட கேள்வி என்னென்ன , அவர் டேப் ரெகார்டர் கொண்டுபோய்ருவார இல்ல அவர் முன் ஜென்மத்த நெனவு வக்கிர அளவுக்கு பெரும் நினைவாற்றல் படைத்தவரா ?

அப்புறம் நானும் ஒரு படத்துக்கு விமர்சனம் எழுதனும்ன்ர முடிவோட , படத்த பாக்க உக்காந்தேன் , ஒவ்வொரு சீன் வர்றப்ப, இத பதிவுல எழுதணும் ,அத பதிவுல எழுதனுமின்னு ,உன்னிப்பா கவனிச்சு ,கடசீல ,
படம் பாக்குற இண்டேரச்டு போயிடுது , ஆனால் , விமர்சனம் எழுதுறவுங்க,ஒரு சீன் விடாம ,அப்படியே சொல்றாங்க ...அவங்கல்கு இந்த போடோ கிராபிக் மூளைன்னு சொல்வாங்கீள அது இருக்குமா ,இல்ல , கை ஓட , ஏதாவது காமிரா செட்டப் இருக்குமா ?
இன்னொருதர பத்தி சொல்ல வேணாம் னு பாத்தேன். சரி விடு கழுதைய, நாம பாக்காததா ன்னுட்டு எழுதறேன் . ஒரு சிலர் , யாராவது பதிவர சீண்டற மாதிரி கமென்ட் போட்டா , 'டே மொதல்ல உன் மூஞ்சிய ப்ரோபயில் ல போடு, அப்புறம் சொல்றேன் ' அப்ப்டினுவாங்க .  நான் என்ன கேட்குறென்ன ,
அவங்க மூஞ்சிய போட்டு ,அது ஒரு விகாரமா இருந்து ,இவர் அரண்டு போயிட்டா என்ன பண்றது ?


அடங்கொன்னியா சரகடிச்சதுல கேட்க வேண்டிய கேள்வி எல்லாம் டாயிலேட்ல போய்ருச்சே. கொஞ்சம் அடக்கி வச்சிருக்கணும் , ஆனாலும் ,பெரியவுங்க சொன்னகளே ,அது கரெக்ட் தான்.  ஆத்திரத்தை அடகுனாலும் , அத அடக்க முடியாது .

ஆ ஒரு கேள்வி , இந்த பின் நவீனதுவம்னு ஒரே கூத்து பன்னாயீன்களே, அத ரொம்ப நாளா காணோம் . இப்ப நான் ஏதோ எழுதி இருக்கேன் ,இது பின்னாலையா இல்ல முன்னாலையா ?

இன்னும் ரெண்டு மூணு கேள்வி இருந்துச்சு , பப் சு , அப்புறமா கேட்குறேன் .


2 comments:

  1. அடடா, இப்படியா போகுது மேட்டர்!

    ReplyDelete
  2. ஆஹா அப்படியா சேதி

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)