இன்னைக்கு ரேடியோவுல , தனக்கு நேர்ந்த சங்கடத்தை ஒரு நேயர் பகிர்ந்து கொண்டது , ஏனோ எனக்கு டி ராஜேந்தரை உடன் ஞாபகப் படுத்தியது . அந்த நேயர் கடைசியில் சொன்ன ஒரு பஞ்ச் காரணமா தெரியல ,அவர் சொன்ன சங்கடம் :
நானும் , எங்க ஏரியா பொண்ணுக்கும், ஒரு நல்ல நட்பு உருவாகியது.
பின்பு நான் அவரை காதலிக்க ஆரம்பித்தேன் . ஒரு நாள் என்னை கல்யாணம்
பண்ணிகிரயான்னு கேட்டப்ப , இல்ல எங்க வீட்டுல என்ன மாமனை தான்
கல்யாணம் செய்யணும்னு சொல்லிட்டாங்க நு சொன்னா அவ.
நானும் சரி,நம்ம எப்பயும் போல நல்ல பிரண்ட்சா இருப்போம்னுன்னு சொல்லி ,எங்க நட்ப வளர்துகிட்டோம் .
அப்புறம் எனக்கு பாரின்ல வேலை கெடைச்சு போயிட்டேன் . ஆனாலும் அவ கூட நட்பை விடாம , அடிக்கடி போன் செய்து பேசிக்கிட்டு தான் இருந்தேன் .
ஆனா சமீபத்தில தான் கேள்வி பட்டேன், அவ மாமா வுக்கும் , இவ குடும்பத்துக்கும் பெரிய சண்டை வளர்ந்து , கல்யாணப் பேச்சை நிருதிடாங்கனு .. ஆனா அவள் ரெண்டு நாளைக்கு முன்னாலே ,அவ மாமனை கல்யாணம் செய்தது என் நண்பர் மூலமாக தெரிய வந்துச்சு .
நான் அவ்வ்ளோவ் பெருந்தன்மையா பழகியும் ,அவ என் கிட்ட கல்யாணம் செய்ய போறதை சொல்லவே இல்லை.
அவளுக்கு போன் பண்ணி ,ஏன் ,எங்கிட்ட கூட சொல்லாம ,இப்படி நடந்து கிட்ட அப்படின்னு கோபமா கேட்டப்ப , உன்னால எனக்கு எதாவது பிரச்னை வரும்னு தான் சொல்லலை சொன்னா பாருங்க, எனக்கு அப்ப இருந்து மனசே கேட்கலை .
மேல சொன்னது எல்லாம் சொல்லிட்டு ,ஒரு பஞ்ச் விட்டாரு ,அது:
"காதிலிக்கிற எல்லாதுக்கும் ஒன்னு சொல்ல விரும்புறேன் , பூக்களை பறிக்கும் பொது , முள்ளால மட்டும் தான் காயம் வரும்னு நெனைக்காதீங்க ,
சில சமயம் பூவே உங்களை குத்திடும் "
nalla panchu uraiyaadal..vaalththukkal.
ReplyDeleteவருகைக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி மதுரை சரவணன்.
ReplyDeleteஆஹா!!!!!!!!!!!
ReplyDeleteவருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார்.
ReplyDelete"பியார் கா பஞ்சாமா" அப்படீன்னு ஒரு படம் பாருங்க...
ReplyDeleteநம்ப VV "ஜெஸ்சி" மாதிரி பொண்ணுங்களை பத்தினது
பொண்ணுங்களையே வெறுத்துடுவீங்க
@ராஜா,
ReplyDeleteஅப்படியா பாக்கணுமே ..வருகைக்கு நன்றி நண்பரே!