Wednesday, October 5, 2011

ஆத்தாடி பாவாட காத்தாட - பாகம் 2

அன்பு வாசகர்களே.  இன்று வியாழகிழமை.  "ஆமையா , நேத்து புதன்  ,
நாளைக்கு சனி கிழமை ,எங்களுக்கு தெரியாது பாரு "  அப்பிடின்னு திட்றீ
ங்களா, கூல் டோவ்ன் மக்காஸ். இப்பதான் , டாக்டர் ஐடியா மணி அவுங்க வூட்ல , ஒரு பெரிய பஞ்சாயத்து ஆயிபோச்சி, இன்னும் அங்க சூடு ஆரல,அப்ப தான் ,அடடா , இன்னிக்கு பாவடைய , காயப் போடுற நாளாச்சே ன்னு ஓடி வந்தேன். 

பஞ்சயதுன்னோவோடைய , சுரு சுருப் பா ,நிமிந்து படிக்க ஆரம்பிசிருபீங்களே.
மேட்டர் என்னன்னா , ஒரு ரம்யமான சொப்பன சுந்தரி ரூபத்தில ,ஒரு ஆளு , வேஷம் கட்டிக்கிட்டு ,அய்யயோ என் கையபிடிச்சி இழுதுடாங்க ன்ற ரேஞ்சுக்கு , ஒரே பிலிம் ,எனக்கு அங்க தெரியும், இங்க தெரியும்னு ஒரே உதார் வேற.

சரி , நம்ம பாவடையில , நாடா கோர்க்க ஆரம்பிபோம்.  நாம பள்ளி வகுப்பு இறுதி ஆண்டு படிக்கிறப்ப, நம்ம வீட்டில ஒரே கரைச்சல், என்னா படிக்கிற , ஆம்பளின்ன ,அவளவு மார்க் வாங்கு ,இவளவு மார்க் வாங்குன்னு.

ஒரே குடைச்சல் தாங்காம ,சரி படத்துக்கு போயி ,நம்ம துக்கத்தை போக்கி கிடுவோம்னு அந்த படத்துக்கு போனேன் .  அந்த படத்துல வந்துச்சுங்க இந்த பாட்டு , நம்ம காயத்துக்கு மருந்து போட்ட மாதிரி. இப்ப கேட்டா கூட ,மனசுக்கு ஒரு மாதிரி ,நம்பிக்கை கொடுக்கிற பாட்டு, கேட்டுட்டு சொல்லுங்களேன்:


முக்கிய குறிப்பு: இந்த பாட்டை , அந்த ரம்யா குட்டிக்கு அர்பணிக்கிறேன்.அது தான் பாவம், தமிழ் மணத்துல, மொத வர முடியலேன்னு ,பாதி மென்டலா அலையுது.

இந்த படத்துல அருண் பாண்டியன் ஒரு துடிப்பா இருப்பாபுல. குச்சியாட்டம் இருந்தவரு (நல்லா கருப்பு அமிதாப்பு மாதிரி இருந்தாரு ஆரம்பத்துல ), அதுக்கு அடுத்து இணைந்த கைகள் ன்ற படத்தில ,சும்மா முட்டை கிட்டைன்னு சாப்பிட்டு , சும்மா சிக்ஸ் பாக் ஓட வந்து கெளப்பிரிப்பாரு பட்டய. 

இப்ப தலைவரு ,பெரிய விநியோகச்தராமே ,அய்ங்கரன் பார்ட்னர் கூட.  

இணைந்த கைகள் படத்துல கூட ஒரு சூப்பர் ஹிட் பாட்டு ,ரொம்ப நல்லா இருக்கும்:


திரைப்பட கல்லூரி மாணவர்கள் ,அப்ப இப்படி வரிசையா , கொடுத்தாங்க . 
இப்ப அது மாதிரி வந்ததா எனக்கு தெரிஞ்சு இல்லை. அப்படி வந்திருந்தா ,பின்னூட்டம் போட்டு ,என் ஜி கே வ வளத்து விடுங்க மக்களே.

அடுத்து சந்திப்போமா ?



No comments:

Post a Comment

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)