Tuesday, November 8, 2011

என்னை ஏதோ செய்கிறாள் - 3 -கிரைம் தொடர்

முந்தைய பாகங்களைப் படித்து விட்டு தொடரவும்.
       part 1 

       Part 2



இன்ஸ்பெக்டர் கணேஷ் , தன் உயரதிகாரிக்கு இரண்டு கொலைகளைப் பற்றியும் விளக்க அழைக்கப்பட்டார். சஞ்சனா கொலைக்கும் , MLA கொலைக்கும் இடையில் உள்ள ஒரே பேட்டர்ன் , இரண்டு திருக்குறள் டச். ஆனால் அந்த குறள்களின் அர்த்தங்கள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாததையும் எடுத்துக் கூறினார். என்ன பண்ணுவீங்களோ எனக்குத் தெரியாது ,சீக்கிரம் முடிக்கணும் என்று உத்தரவு வர , "என்கிட்டே எகிறுனா நான் என்ன பண்ணுவேன், இளையதாசன் தான இந்த கதைய எழுதுறாரு ,அவரப் போயி கேளுங்க " என்று மனதினுள் நினைத்தவாறே , "எஸ் சார் , ஓகே சார் ,நோ சார் " என்று மணி ரத்னம் ஸ்டைல் பதில்களைச் சொல்லி , விட்டால் போதும் என்று அங்கிருந்து நழுவினார் இன்ஸ்பெக்டர்.

ஸ்டேசனில் உக்கார்ந்து நாயர் கடை டீயை சுவராஸ்யமாக உறிஞ்சி குடித்துக் கொண்டிருந்த இன்ஸ்பெக்டர் கணேஷ்,கான்ஸ்டபில் ராமின் வருகைக்காக காத்திருந்தார்.  கான்ஸ்டபில் ராம் மழையில் நனைந்ததால் உடல் நடுங்க , இன்ஸ்பெக்டரின் அறைக்கு வந்து ஒரு சல்யுட் வைத்தார். 

"என்னய்யா , MLA ஒய்ப் என்ன சொல்றாங்க?"
"சார் , MLA பத்தி நல்லா விசாரிச்சேன் ,நீங்க சொன்னபடி ,அவரின் அந்தரங்க விஷயம் பத்தி கேட்டுப் பார்த்தேன், ரகசியம் எதுவுமில்ல"
"நல்லா கேட்டியா , அரசியல்ல இருக்குறாப்ல ,வேற ஏதாவது பொம்பள விவகாரம் எதாச்சும் இருக்கா"
"சார் ஆள் ஒழுக்கமான ஆள் தான் போல இருக்கு சார், தான் காலேஜுல ஒரு பொண்ண விரும்புனதக் கூட பொண்டாட்டி கிட்ட மறக்காம சொல்லிருக்கரு சார்"
"அப்படியா ,யார் அந்த பொண்ணுன்னு வெவரம் கேட்டியா?"
"இல்ல சார் , காலேஜுல லவ் பண்றது சகஜமான விசயமாசேன்னு ஒன்னும் மேக்கொண்டு கேட்கல சார்"
"சரி விடு, போய் தலையத் துவட்டு மொதல்ல" என்று ராமை அனுப்பி வைத்துவிட்டு தலையை பிடித்துக் கொண்டு உக்கார்ந்தார்.

ஏதோ உள்ளுணர்வு எச்சரிக்க ,உடனே MLA மனைவிக்கு போனைப் போட்டார்.

"அம்மா ,நான் இன்ஸ்பெக்டர் கணேஷ் பேசுறன்"
"சொல்லுங்க சார்" ரொம்பவும் சன்னமாக MLA வின் மனைவி.
"கான்ஸ்டபில் கிட்ட அய்யாவோட காலஜ் காதலி பத்தி ஏதோ சொன்னிங்கன்னு கேள்விப் பட்டேன்."
"ஆமா சார், ஏன் கேட்குறீங்க?"
"இல்ல ,அவங்க யார் ,என்ன விவரமுன்னு கேட்கலாமுன்னு..."
"அவங்க பேரு ஜமுனா, திண்டுக்கல் சேந்தவங்க,எங்க கல்யாணத்துக்கப்புறம் 
  ஒரு நாள் அவங்க வந்திருந்தாங்க, அவங்க போன் நம்பர் மட்டும் இருக்கு வேணுமா சார் "
"கொடுங்க ,கொடுங்க " ஆர்வத்துடன் அந்த நம்பரை கேட்டு வாங்கினார் கணேஷ். 

வெகு நேரம் அந்த என்னை தொடர்பு கொண்டும் நோ ரிப்ளையாக இருந்தது.
திண்டுக்கல் இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு ,விவரம் கூறி , ஜமுனாவின் அட்ரசைக் கண்டுபிடித்து ஒரு நடை பார்த்து வருமாறு வேண்டிக் கொண்டார் .

திண்டுக்கல் எஸ்.ஐ ,ஜமுனாவின் அட்ரசைக் கண்டுபிடித்து , அங்கே போய் பார்க்க ,வீடு பூட்டி இருந்தது . பக்கத்து வீட்டில் விசாரிக்க , முந்தா நேத்து இருந்தே பூட்டி இருக்கு சார் என்றார்கள். அந்த எஸ்.ஐ கணேஷுக்கு விசயத்தை செல்லில் கூப்பிட்டு தெரிவத்தார். ஜமுனாவின் பக்கத்து வீட்டுக் காரரிடம் ,ஜமுனா வந்தாங்கன்னா எங்க நம்பரக் கூப்பிடச் சொல்லுங்க என்று அவரின் நம்பரை கொடுத்துவிட்டு புறப்பட்டார் அந்த இன்ஸ்பெக்டர்.

மறு நாள் காலையில் , திண்டுக்கல் எஸ்.ஐ மொபைல் அதிர , 
"ஹலோ எஸ் ஐ பேசுறன், யார் அங்க"
"சார் , நான் ஜமுனா வீடு பக்கத்து வீட்ல இருந்து கூப்பிடுறன் சார்"
"எந்த ஜமுனா?"
"சார் நேத்து வந்து விசாரிசீங்கல்ல "
"அட ஆமாம் ,மறந்தே போயிட்டேன்,சொல்லுங்க என்ன விஷயம்,அவங்க வந்துட்டாங்களா?"
"இல்ல சார், அவங்க வீட்ல இருந்து ஒரே bad smell வருது சார்,நாதம் பொண நாத்தமுன்னு சொல்லுவாங்கல்ல அது மாதிரி இருக்கு சார், கொஞ்சம் வந்து பாருங்க சார் ப்ளீஸ்  "
"அப்படியா சரி நான் உடனே வரேன்".

      ௦௦௦௦௦௦௦௦(((()))))))))))௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

ஜமுனாவின் வீட்டை உடைத்து உள்ளே புகுந்த போலீசார் ,கர்சீப் கொண்டு மூக்கை உடனே பொத்திக் கொண்டனர். உள்ளே ஹாலில் , ஒரு பெண்ணின் பிணம் அழுகத் தொடங்கிய நிலையில். பக்கத்து வீட்டுக் காரரை கூப்பிட்டு காமிக்க ,அவர் அருவருப்புடன் அந்த உடம்பை பார்த்துவிட்டு , "ஆமா சார் ,அவங்க தான் அது " என்று கன்பார்ம் செய்தார்.

திண்டுக்கல் எஸ்.ஐ ,அப்போது தான் டீ.டேபிளின் மேல் இருந்த அந்த காகிதம் அவர் கண்ணைக் கவர ,அதனை எடுத்துப் படித்தார் . அதில் இருந்தது ,கரெக்டா யுகிசுருபீங்களே ,ஆமா அதே தான் ,மறுபடியும் ஒரு திருக்குறள் :

அழுக்காறு எனஒரு பாவி திருச்செற்றுத்
 தீயுழி உய்த்து விடும்.

 குறிப்பு : கருணா நிதி 


திண்டுக்கல் எஸ்.ஐக்கு  , இன்ஸ்பெக்டர் கணேஷ் சொன்ன விஷயங்கள் நினைவுக்கு வர, உடனே அவரை தொடர்பு கொண்டு பேசி விவரத்தை எடுத்துரைத்தார். ஓவர் தி போன்லயே குறளைப் படிக்கச் சொல்லி கேட்டுக் கொண்ட இன்ஸ்பெக்டர் கணேஷ் , ஆர்வத்துடன் ராமின் போனில் மீண்டும் குறளைத் தேடி பொருள் அறிந்தார். பொருள் உங்களுக்கு தெரியவில்லை என்றால் இது தான் அது :

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய
வழியிலும் அவனை விட்டுவிடும்.


இந்த கேச தீத்தே ஆகணும் என்ற வெறியில் இன்ஸ்பெக்டர் கணேஷ் ,திண்டுக்கல்லுக்கு உடனே கிளம்பிவிட்டார். வெளியில் நல்ல மழை சாத்தோ சாத்து என்று சாத்திக் கொண்டிருந்தது.

திண்டுக்கல்லை அடைந்து போலீஸ் ஸ்டேசனில்  நுழைந்த இன்ஸ்பெக்டர் கணேஷை வரவேற்றார் அந்த ஊரின் எஸ்.ஐ.   டீ உபசரிப்புக்கு பின் ,
"என்ன சார் நல்ல மழையில் கெளம்பி வந்துடீங்களே "
"ஆமா சார், இன்னும் எத்தனை கொலை விழப் போகுதே ,எப்படியாச்சும் கண்டுபிடிக்கணும் பாருங்க , ஏற்கனவே மேல இருந்து பிரசர் வேற , MLA மர்டர் 
பெரிய விசயமாயடிச்சி, பத்திரிக்க காரனுங்க வேற , இல்லாததையும் பொல்லாததையும் எழுதி , நம்ம வேலைக்கு வெட்டு வச்ருவாங்க போல"
"ஆமா சார், நானும் ஆரம்பத்துல இருந்து இப்ப தான் கேஸ் டீடைல்ஸ் பார்த்தேன்,
 ஒன்னும் புரியலையே சார் "
"நாம தான் படிசிருக்கமே சார் எப்படியும் கொலையாளி ஏதாவது ஒரு விஷயம் அஜாக்கிரதையா விட்டுட்டுப்  போயிருப்பான்  சார் , அந்த ஜமுனா வீட்டை நல்லா சோதனை செஞ்சீங்களா"
"ஒ எஸ் , ஒன்னும் கெடைக்கல சார்  , இதோ இந்த பேப்பர் தான் இதுல  அந்த குறள்"

அந்த பேப்பரின் பின்புறத்தை பார்த்த இன்ஸ்பெக்டர் கணேஷ் ஒரு நிமிடம் திகைத்து , "சார் அத இப்படிக் கொடுங்க " என்று வாங்கிப் பார்த்தவரின் முகம் , குழம்பிக் கிடந்த குட்டை மெல்லத் தெளிவதைப் போல ,கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசிக்கத் தொடங்கியது.

--தொடரும் 

டிஸ்கி : அடுத்த பதிவில் முடிவடையும். பிடித்திருந்தால் நண்பர்களுக்கு பரிந்துரைக்கவும் . நன்றி. 








3 comments:

  1. கதை, எதிர் பார்த்ததை விட சூப்பராகவும், சஸ்பென்ஸாகவும் இருக்கு...

    ReplyDelete
  2. @muthu
    Welcome Muthu and thanks for your comment.

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)