Monday, November 14, 2011

விஜய் சொன்னது சரியா?

நீங்கள் அனைவரும் எங்கேயும் எப்போதும் படம் பார்த்திருப்பீர்கள். அதில் ஒரு விஷயம் , ரெண்டு ஜோடிகளுக்கு நடப்பதாக காட்டி இருப்பார்கள். முதல் ஜோடி - அந்த புது மாப்பிள்ளை ஒரு நிறுத்தத்தில் இறங்க முடிவு செய்து இறங்கிவிட்டு பின் மறுபடியும் அதே பஸ்ஸில் ஏறி உயிரை விடுவது. ரெண்டாவது ஜோடி - ஜெய் அவர் ஊரில் இறங்க முடிவு செய்துவிட்டு பின் வேறொருவரின் அட்வைஸ் -ல் , இறங்காமல் தொடர்ந்து பயணித்து உயிரை விடுவது.

நாமும் இவ்வாறே முதலில் ஒரு முடிவு எடுத்துவிட்டு ஏதோ ஒரு காரணத்தினால் , வேற சாய்ஸ் தேர்ந்துடுத்துவிட்டு , 'ச்சே, மொதல்ல நெனச்சதே சரியா இருந்திருக்கும் போல ' என்று பல சமயங்களில் கட்டாயம் புலம்பியிருப்போம்.  'நான் ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா ஏன் பேச்சை நானே கேட்கமாட்டேன்' அப்படின்னு இருந்தா, இந்த மனக் குழப்பத்துக்கான தேவையே இருக்காது அப்படின்னு நான் நினைக்கிறேன். ஏதோ சொல்வாங்களே , 'புத்திக்கு தெரியுது , மனசுக்கு தெரியலையே ' அதுமாதிரி தான் நம்ம கதைகளும்.


இப்ப ஒரு உதாரணத்துக்கு , கடைக்கு சேலை எடுக்க மனைவியுடன் போன எத்தனையோ கணவன்மார்கள் இத கட்டாயம் அனுபவிச்சிருப்பீங்க. மொத ஒரு கடையில ஏறி, கஷ்டப்பட்டு சூஸ் பண்ணுவாங்க . அதுக்கப்புறமும் விடாம, வேற சேலைகளை அதே கடையிலையோ அல்லது இன்னும் ரெண்டும் மூணு கடை ஏறி இறங்கி அலுக்காம பாத்துட்டு கடைசியா வேற ஒரு சேலைய வாங்கிட்டு, "ச்சே அந்த மொத சேலையே ரொம்ப நல்லா இருந்தா மாதிரி தோணுதே ,ச்சே மிஸ் பண்ணிட்டேனே " என்று புலம்புவார்கள்.

ஆண்கள் மட்டும் சும்மாவா, "அந்த எலெக்ட்ரானிக்ஸ் அயிட்டம் நல்லா இருக்கு அத வாங்கணும் "அப்பிடின்னு பல நாள் ஆராய்ச்சி பண்ணிட்டு ,கடைசி நிமிசத்தில ஏதோ ஒரு ரீசன் ல ,வேற மாடல் வாங்கிட்டு வந்துட்டு, "ச்சே அந்த மாடலே வாங்கி இருக்கணுமோ" என்று கவலையில் ஆள்பவர்களும் உண்டு.

குழைந்தைகளிடம் பெருமையாக , 'உனக்கு என்ன டிரஸ் பிடிக்குது ' என்று அவர்களை காமிக்க சொல்லிவிட்டு , அவர்கள் செலக்ட் செய்ததை எடுக்காமல் , "அது குவாலிடி சரியில்லை, இதுக்கு போய் இவ்வளவு விலையா?" , அப்படி இப்படி என்று தம் மேதாவித்தனத்தை காட்டி ,அவர்களுக்கு பிடிக்காத ஆனால் தமக்கு பிடித்த டிரெஸ்ஸை தன குழந்தையின் தலை மேல் கட்டும் பெற்றோர்களும் உண்டு .

அது மட்டுமா, பள்ளி முடித்து , இந்த கல்லூரியா ,அந்த கல்லூரியா , கல்லூரி முடித்து இந்த ஸ்பெஷல் கோர்ஸ் இல்ல அந்த ஸ்பெஷல் கோர்சா என்று குழம்பி ஒரு வழியாக ஒன்றை தேர்ந்தெடுத்து விட்டு ,அப்புறம் வருத்தப் படுவது.

இதுக்கெல்லாம் மேல,  கல்யாணத்துக்கு பொண்ணோ/ மாப்பிள்ளையோ  முதலில் ஒரு வரனைப் பார்த்து விட்டு, அப்புறம் பல வித நிர்பந்தங்களினால் வேற ஒன்னை கட்டிவிட்டு மனதுக்குள் புலம்புவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் கொஞ்சம் நல்லா நினச்சிப் பார்த்தா..

     பார்த்தவுடனே டக்குன்னு பிடிச்ச துணி, இடம் , முகம் , ஆண்/பெண்,பெயர்,வேற  எதுவேணா பாருங்க ,அந்த குட் பீலிங், திருப்தி நீங்க அதுக்கப்புறம் வேற சிறந்ததா ஆராய்ந்து தேர்ந்தேடுதுருந்தாலும் கிடைக்காது .

  ஆங்கிலத்தில் கூட சொல்வாங்களே , First Impression is the best Impression... இது அடுத்தவுங்க நம்ம மேல வைக்குற மதிபீடுக்கு மட்டுமில்ல , நாம ஆசைபடுற எந்த ஒரு விசயதுக்குன்னும் கூட நாம எடுத்துக்கலாமே.


  உளவியல் ரீதியா பார்த்தாலும் , நீங்க மொத மொத தேர்ந்துடுக்குற எந்த ஒரு விசயமும் , உங்களோட ஆள் மனதின் சப் கான்சியஸ் சாய்ஸ். அது எப்பவுமே கரெக்ட் ஆ இருக்கும் உங்க பெர்சொனாலிட்டி படி. ஆனால் , இன்னொரு மனது இருக்கே , அதாங்க கான்சியஸ் மைன்ட், அது என்னென்ன குறைபாடு இருக்குனு கணக்கு போட்டு , வேற சாய்ஸ் எடுக்க வச்சு ,அப்புறம் உங்கள ஒரு ஏக்க நிலையில வச்சுருது.


நீங்க ஒரு சோதனை முயற்சியா , உங்க மனசுக்கு மொதல்ல 'பட்'டுன்னு எது பிடிசிச்சோ, அத மட்டும் சிறிய லெவல்-ல சூஸ் பண்ணி பாருங்களேன் , கட்டாயம் உங்களுக்கு ஒரு திருப்தி கிடைக்கும் , மத்தவங்களுக்கு அது எவ்வளவு சின்ன திருப்தியா இருந்தாலும்,உங்களுக்கு அது பெரிய நிறைவைக் கொடுக்கும்.


டிஸ்கி : நீங்க ஏற்கனவே ஒரு தடவ நல்லா யோசிச்சு முடிவெடுத்து அதையே செயல்படுத்துபவரா , ஐயா/அம்மா , நீங்க மனிதரல்ல , தெய்வம்...பெரிய பெரிய ஞானிகள் காலம் காலமா சொல்லிக்கிட்டு வர்றத இயற்கையாவே பெற்ற பெரும் பாக்கியசாலி!
    
அப்புறம் அந்த பேமஸ் விஜய் பன்ச் வசனத்த எழுதின ஒரிஜினல் புண்ணியவான் வாழ்க! இந்த வசனத்த தெலுகு ,மலையாளம் ,கன்னடம் ,ஹிந்தி அப்படின்னு பல மொழிகள்ல வேற வேற ஹீரோக்கள் சொல்லிட்டாங்க..ஒரிஜினலா சொன்னது யாருப்பா?

6 comments:

  1. அருமையான கட்டுரை

    ReplyDelete
  2. @சி.பிரேம் குமார்
    மிக்க நன்றி நண்பரே!

    ReplyDelete
  3. same blood
    இந்தப் பிரச்சனை எனக்கு ரொம்பவே இருக்கு சார்...
    நல்லதொரு தலைப்பில் எழுதி இருக்கிறீர்கள்..

    ReplyDelete
  4. @shrek
    வருகைக்கு நன்றி.தகவலுக்கும்.

    ReplyDelete
  5. @Mohamed Faaique
    மொதல்ல பிடிச்சத இனிமே பண்ணிப் பாருங்க!

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)