Tuesday, November 29, 2011

லீவ் லெட்டர் தேவை இல்லை இனிமே!


"ஸ்கூல் பஸ் வர்ற டைம் ஆச்சு,  சீக்கிரம் சாப்பிடு சனியனே" என்று அவசர அவசரமாக குழந்தையின் வாயில் திணித்து முழுங்கச் செய்யும் தாய்மார்களை நீங்கள் நிஜத்தில் பார்த்திருக்கக் கூடும்.

'அய்யய்யோ , ஆபிஸ் பஸ் வர்ற டைம் ஆச்சு' என்று அவசரம் அவசரமாக முழுங்கி முழுங்காமல் தின்று விட்டு காலையில் பஸ்ஸை பிடிக்க ஓடுபவர்கள் நீங்கலாக கூட இருக்கக் கூடும்.

'ச்சே போன மாசம் தான் இந்த பேன்ட் , புதுசா வாங்கினேன், அதுக்குள்ள இடுப்புல டைட்டு ஆயிடிச்சே' என்று கஷ்டப்பட்டு அந்த பாவரைட் பேண்டை மாட்டிக் கொண்டு ஊர் சுத்த கிளம்புபவர்களும் உண்டு.

'ஆந்த்ரா மெஸ்சுல, பிரியாணி சும்மா கார சாரமா இருக்கும்' அப்பிடின்னுட்டு வாரா வாரம் போய் வெளுத்து வாங்குபர்கள் பல பேர்.

'ஒரு நாளைக்கு எனக்கு நாலு காப்பி குடிச்சாதான் எனக்கு வேலையே ஓடும்' என்போர் பலர்.

எனக்குத் தெரிந்த நண்பர்  வீட்டிற்கு போயிருந்தேன். காலையில் இருந்து பேசிக்கொண்டிருந்து விட்டு, லஞ்ச் டைம் வந்தவுடன், அவரின் அம்மா சுவையான உணவை பரிமாறினார்கள். நன்றாக சாப்பிட்டு முடித்து, அரட்டையை தொடர்ந்த போது, நண்பரின் அம்மா, 'பேசினது போதும்,போய் கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிங்க' என்று சொன்னார். நான் , 'இல்லம்மா ,சாப்பிட்டவோடனே படுக்குற பழக்கம் எனக்கு இல்ல' என்றேன். அவர் என் அம்மா என்னை மேலும் கீழும் பார்த்துவிட்டு, 'ஏ உடம்பு வச்சுரும்முன்னு பயமா, நாங்கெல்லாம் ஒரு அரை மணி நேரம் படுத்து ரெஸ்ட் எடுப்பது வழக்கம்' என்றார்.


மேல சொன்ன உதாரணங்கள் எல்லாமே  சாதாரணமாக நடப்பவை தானே என்று இதுவரை நாம் அலட்சியப்படுதியவர்களாக இருந்தால் , இனிமேல் அப்படி அட்லீஸ்ட் செய்யாமல் இருப்பது நலம்.

ஏன்னு கேட்குறீங்களா? ஏன்னா ,  நம் ஜீரணத்தை பாதித்து , நமக்கு 
வயத்து உப்பிசம்,ஏப்பம்,வாயு, வயித்தில் எரிச்சல் அப்புறம் வாந்தி இப்படி பல வயித்துக் கோளாறுகள உண்டு பண்றது மேல சொன்ன மாதிரிக் காரணங்களால் தானாம்.


தல வலியும், வகுத்து வலியும் அனுபச்சவங்குளுக்கு தெரியும் அதோட பவர் என்னென்னு.

மறுபடியும் சொல்லறேன் , கிழே சொன்ன மாதிரி நடந்து கொண்டால், வயித்து உபாதைகளில் இருந்து பெரும்பாலும் தப்பிசிகிடலாமாம்.


1 . உணவில் நிதமும் நீர் மோர் அல்லது தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள். ஏன்ன, அதுல இருக்குற பாக்டீரியாக்கள் , நம் செரிமானப் பாதையை சென்றடைந்து , அங்கே தங்கிக் கொண்டு நமக்கு நல்லது பண்ணுமாம்.

2 . சாப்பிட்டு முடித்தவுடன்,சாய்ந்து உக்காருவதோ அல்லது லேசா கட்டய கொஞ்சம் சாய்ப்போம் என்பதோ கூடாது. அப்படி சாஞ்சி படுதீங்கன்ன அது அஜீரனத்துல கொண்டு போய் விட்டுடும். உணவு உண்ட பின்,குறைந்தது இரண்டு அல்லது மூன்று மணி சென்று தான் படுக்கைக்கு போகணும்.

3 . எதை சாப்ட்டாலும் மெதுவா அவசரம் இல்லாம , ரசிச்சு , ருசிச்சு சாப்பிடுங்க. நம்ம அவ்வை பாட்டி சொன்ன மாதிரி, 'நொறுங்கத் தின்னுங்க'.
அவசரம் அவசரமா சாப்பிடுரப்ப , காத்து உள்ள போய், அப்புறம் உங்க ஜீரண செயல்பாட்டை ஒரு வழி பண்ணுமாம்.

4 . நல்லா நார் சத்து இருக்குற உணவா சாப்பிடுங்க. இல்லேயின்ன காலைல டாயிலேட்ல முக்கல் முனகல் தான் பண்ணனும்.

5 . அடிக்கடி காபி , கோக் , கட்டிங் போடுறது, அப்புறம் கண்ல தண்ணி வர்ற அளவுக்கு உஸ் உஸ் ன்னு சொல்லிக்கிட்டு நல்ல மசால் , காரம் மிகுந்த உணவுகளை சாப்பிடுவதும் அஜீரணத்தில் கொண்டு போய் விட்டு , ஜெலுசில தேட வச்சிரும்.

6 . இடுப்ப இறுக்கிப் பிடிக்குற பேன்ட் , அல்லது பெல்ட நல்லா இறுக்கி கட்டுறது கூடாது. அப்படி செஞ்சா , ரொம்ப நேரம் உங்க வயிர அழுத்தம் கொடுத்து, உள்ள இருக்குற செரிமான ஆசிட் நெஞ்சுக்கு ஏறி அப்புறம் நெஞ்செரிச்சல் தான். சமயத்துல ஹார்ட் அட்டாக் ரேஞ்சுக்கு பயம் குடித்திடும்.

டிஸ்கி:  உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருந்தாலும் இன்னொரு தடவ ஞாபகப்படுத்துனதா நெனச்சுகொங்க.  (ஆகா நாமளும் உடல் நல பதிவு போட்டாச்சு.)

2 comments:

  1. ///ஆகா நாமளும் உடல் நல பதிவு போட்டாச்சு//

    வாழ்க வழமுடன்....

    ReplyDelete
  2. நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்... www.rishvan.com

    ReplyDelete

படித்தது பிடித்தால் நண்பர்களுக்கு என் பதிவை, மறக்காமல் ,மறக்காமல் அறிமுக படுத்துங்கள்,அப்படியே ,எனக்கும் உங்கள் முத்தை உதிர்த்து விட்டு சென்றால் நானும் பதிவுலகில் பணக்காரன் ஆவேன் உங்கள் தயவில் :-)